Search This Blog

08 March 2014

நகைச்சுவை...!

புதிதாக வேலைக்கு சேர்ந்தவன் எக்ஸ்டென்சன் தொலைபேசி மூலம் கேன்டீனைத் தொடர்புகொண்டான்.

“ஏய், சூடாக ஒரு கப் காப்பி வேண்டும். உடனே அனுப்பு!” எதிப்புறம் இருந்து பதில் சூடாக வந்தது. நீ தவறான எக்ஸ்டென்சனைக் கூப்பிட்டிருக்கிறாய்! “இடியட், நான் யார் தெரியுமா ?உன் கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர்..!”

இப்படி ஒரு மனைவி இருந்தால் கணவனே மகிழ்ச்சியானவன்...!

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!

கணவன்: என்ன?

மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….


கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..

(மறுநாள் இரவு)

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது…!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.



பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது!

16 February 2014

அப்பா

உணர்வுகளை மறைத்து வைக்க தெரிந்த ஒரே காரணத்தால் மாதா.. பிதா. என்ற பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜீவன்.

மனைவி கரு சுமக்க துவங்கிய நாள் முதல், தன் குழந்தை பற்றிய கனவுகளை சேமிக்க தொடங்கியபொறுப்புள்ள தந்தை.

மகள்

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்.அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி.

போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது,

நட்பு

தயக்கத்தோடு ஆரம்பிக்கும் 
முதல் உரையாடல். 

பயத்தோடு பகிர்ந்து கொள்ளப்படும் 
அலைபேசி எண்கள். 

அவள் தவறாக எண்ணிவிடுவாளோ?
என்று யோசித்து,யோசித்து பேசும் தருணங்கள்.

காதல்,கீதல் என உளறுவானோ?
என்று குழப்பத்தோடு பேசும் ஆரம்பக்காலங்கள்.

புரிதல் தொடங்கும் நேரத்தில்
தானாக மலர ஆரம்பிக்கும் நட்பு மலர்.

புரிந்து கொண்ட பின், 

நிம்மதியான வாழ்க்கை

செல் போன் சிணுங்கும்போது யார் என்று பார்க்காமலே,

போனை எடுத்து நீங்கள் பேச ஆரம்பித்தால்,

நீங்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்...!