Search This Blog

31 May 2013

மனைவி எப்படி இருக்க வேண்டும் ...?

கணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டும். மாறாக, அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.

அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய் போல் இருக்க வேண்டும்.

22 May 2013

காதலிக்கு ஒரு கடிதம்

அன்பே!

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற
முடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில் சாயங் காலம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன். சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது.

என் காதல்

காதலி வேண்டும் என்றால்
இன்னொரு பெண்ணை நாடி இருப்பேன்
என்றும் அழியாத காதல் வேண்டும் ..

உன்னைப்போல் நேசிக்கும் ஆன்மா
வேண்டும் என்பதால்
உனக்காகவே காத்திருக்கிறேன்...!

21 May 2013

நித்திரையில்

முத்தங்களை
அள்ளித் தெளித்துவிட்ட
நிம்மதியில்
நீ....
நித்திரையில்
எடுத்தும்
கோர்த்தும்
கலைத்துமாய்
நான் ♥...!

16 May 2013

மங்குனி அமைச்சர்

KPN ல எனக்கு பக்கத்துல இருந்த ஒரு பொண்ணு போன்ல யாருகிட்டையோ fb பத்தி பேசிக்கிட்டு வந்திச்சு....... எனக்கு துரு துருன்னு ஆகிபோச்சு, நைசா பேச்சு குடுத்தேன்....

" மேம் நீங்க fb அக்கவுண்ட் வச்சிருக்கிங்களா ?"

"எஸ் அப்கோர்ஸ் , ஏன் கேக்குறிங்க ?"

" நானும் வச்சிருக்கேன் அதான் கேட்டேன் "

அவளிடம் இருந்து கற்றுக்கொண்டேன்

அவளிடம் இருந்து கற்றுக்கொண்டேன்...

பாசம் காட்ட,
மற்றவர்களை அனுசரித்து போக,
கோவத்தை அடக்க,
எந்த சூழ்நிலையிலும் புன்னகைக்க, 
சிந்திக்க,
ஒற்றுமையாய் இருக்க,
விட்டுக்கொடுத்து போக,
அனைவரின் ஆசையையும் பூர்த்தி செய்து வைக்க,
ஆசைகளை மறைக்கவும் 
அவளிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன் 

அவள் தான் என் தாய்...!

09 May 2013

காதல்


கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் 

--- பாரதிதாசன் 

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு


 இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.  அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.  சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது.  3 வினாடிகளுக்கு பிறகு  வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித  பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.


இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

வாழ்க்கை

எழுதப்படாத பக்கங்களில், வரையப்படாத ஓவியங்களில்,
பாடப்படாத பாடல்களில், செதுக்கப்படாத வெட்டுகளில்,
இன்னமும் காத்திருக்கிறது ஒரு வரலாறு,
எனக்காக...!
உனக்காக...!
நமக்காக...! 

காணமல் போன சொற்கள் ...!

நம் உரையாடல்கள் அனைத்தையும்
அலைபேசிகள் தின்று தீர்ந்துப் போனபின்
நம் திருமணம் நடந்ததா ?

இன்றும் தான் பேசுகிறோம்
'சரி' என்ற ஒற்றைச் சொற்களால்
முடிந்துவிடுகிறதே நம் உரையாடல்கள் ...!

07 May 2013

முத்தம்

முத்தமென்பது
தற்காலிகமாக
என்னுயிரை
உன்னிடத்தில்
மாற்றும் முயற்சியின்
வெற்றி...!


02 May 2013

எங்கோ படித்தது

வரங்களே
சாபங்களானால்
இங்கே
தவங்கள்
எதற்காக?

கருணை

கூரை மேல் குடும்பம்
தெப்பமாய் குடிசை
வெள்ளத்தில் நாய்
துயரத்தில் சிறுவன்
...
...
தவிப்பில் க‌ண்ணீர்... !