நீர்,நெருப்பு என இரண்டையும் தன்னுள் அடக்கி, தன்னை தொட்டே தன் பலத்தினை நிரூபிக்க முடியும் என வாயுவிற்கும் வாய்ப்பளிக்கும் இம்மண்ணை அத்தனை சாதாரணமாக எண்ணிவிட முடியாது. இங்கு அனைத்திற்கும் காரணம் மண்தான். மண் தொட முடியாத ஒரே விஷயம், ஆகாயம் மட்டுமே. அதுவும் இறப்பிற்கு பின் மட்டுமே அடைய முடியும்.
உலகின் அத்தனை செயல்களுக்கும் ஆதாரமாய் நிற்பது மண் மட்டுமே. மனிதப்பிறவியின் அசைக்கவே முடியாத, விடவே இயலாத, ஆழமான ஓர் உணர்வு ஆசை. அந்த ஆசையின் அஸ்திவாரமே மண்தான்.
