Search This Blog

11 May 2017

காதலன் பல்வாள்தேவன் ...!

     இந்த நூற்றாண்டின் தவிர்க்க முடியாத இந்திய சினிமாவாக பாகுபலி இடம் பிடித்தாகி விட்டது. யாரும் மறுக்க முடியாது. படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. பாகுபலியும் பல்வாள்தேவனும் இயற்பியல் விதிகளை மீறும் வல்லமை படைத்தவர்கள் என்று முதல் பாகத்திலேயே தெரிந்து விட்டதால் அதை பற்றி பேசுவதும் வீண்.  நான் பேச விரும்புவது படத்தில் சரியாக சொல்லப்படாத விசயங்களை. 

21 March 2017

சிறகுகளின் ஆறுதல்...!

​​திருமண அழைப்பிதழ் வந்தது. முகவரியில் காயத்ரியின் கையெழுத்து. என் பெயர் கூட அவள் எழுதும்போது புதுக்கவிதை.

என்ன நடந்திருக்கும்…? ஏன் இந்த திருமணம்…? அவளுக்கு என்னவாயிற்று…? எப்படி மறக்க முடிந்தது…?
‘ அரவிந், ஊருக்குப் போறேன். எங்க பாட்டி ரொம்ப ஆசாரம். அவதான் எங்க குடும்பத்துக்கு மகாராணி.

அப்பா இன்னும் தன் தாய்க்குச் சேவகன்தான். அம்மா அடிமை. நம்ம காதலை எப்படியும் சொல்லிடுவேன். பாட்டி சம்மதிக்கணும். இல்லேன்னா…’


17 March 2017

மாலு... மாலு... மாலு...!

          சென்னை போன்ற மாநகரங்களில் வசிக்கும் அத்தனை பேரழகிகளையும் ஒரே இடத்தில் ஒன்று திரட்டுவதற்கென்றே உருவாக்கப்பட்ட இடம், ஷாப்பிங் மால்கள். மால்களில், ஒரு வினாடிக்குச் சராசரியாக எட்டு தேவதைகள் க்ராஸ் செய்வதால், 25-30 ஆண்டு ஆதர்ச தம்பதிகள்கூட, மால்களுக்குச் செல்லும்போது, உறவு சீர்குலைந்து ரிட்டர்ன் ஆவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் மால்களில் திரும்பிய திசையெங்கும் தேவதைகள்… தேவதைகள். ரத்தத்தில் சீஸும், சாஸும் கலந்த தேவதைகள். சென்னை ஏர்போர்ட் கண்ணாடி உடையும் சத்தம் போல ‘ஸ்லிங்’ ‘ஸ்லிங்’ என்று சிரிக்கும் தேவதைகள். இதனால் அங்கு செல்லும் ஆண்கள், மனிதனாகச் சென்று கவிஞனாக வெளிவருகிறார்கள்.