Search This Blog

15 October 2016

காதலும் ரகசியங்களும்...!

சில நாட்களுக்கு முன்பு எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
Today is “heart2heart talk” day. U can ask me any question that u wanted to ask for a long time and i will reply. REPLY MUST. Forward this to your friends and get interesting questions.

மிக சுவாரசியமாக இருக்கவே நானும் என் நண்பர் நண்பிகளுக்கு அனுப்பினேன். சொல்லி வைத்தது போல எல்லோரும் ஒரே விஷயத்தை பற்றியே கேட்டார்கள்.
காதல்!!

20 July 2016

படைப்பானவள் ...!

​​‘ஏன் இன்னைக்கும் பத்து ரூபா டிக்கெட்ல படத்துக்கு கூட்டிட்டு போற… காசா இல்ல நம்மகிட்ட’

‘ஒரு உழைப்ப… ஒரு படைப்ப பக்கத்துல வச்சு ரசிக்குறேன்னு வச்சுக்கோ!’

‘நான் உழைப்பா படைப்பா?’

‘உழைப்புல உ… படைப்புல ப ‘

‘ஆரம்பமா! சரி… அப்போ முடிவு?’

10 July 2016

இசை மன்னர் எம் எஸ் வி...!

  1940 களில் குடும்ப வறுமையால் சினிமாவில் நுழைந்து , அந்தக் கால இசையமைப்பாளர்களின் அரவணைப்பை பெற்று, இசை உதவியாளராக உயர்வு பெற வெறும் அனுதாபம் மட்டும் காரணமாக இருக்கவில்லை. இயல்பான ஆற்றலும் , இசை மீதான தீராத காதலுடன் தான் அவரது இசை வாழ்வு தொடங்கியது.

  ‘பூ மாலையில் ஓர் மல்லிகை/ இங்கு நான்தான் தேன் என்றது’ என்கிற பாடல் காதுகளுக்கு தந்த தித்திப்பைப் போன்று எந்தப் பழங்களும் என் வாய்க்குத் தரவே இல்லை. நின்று நிதானித்துப் பார்க்கும்போது - இன்று நாற்பதைத் தாண்டியிருக்கும் தமிழர்களின் வாழ்க்கைப் பொழுதுகளில் ஒரு சென்டி மீட்டர் இசை மழையையாவது பொழிந்திருப்பார் எம்.எஸ்.வி.


28 June 2016

தமிழ் வாலி ...!

                                                        

                                    
     இன்னும் ஒரு கனவுபோலத்தான் இருக்கிறது கவிஞர் வாலி இப்பூவுலகைவிட்டு விண்ணுலகு சென்றது. திரைப்பட பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், இயக்குனர் என பன்முகங்களை கொண்ட கவிஞர் வாலியின் சாதனை வரலாறு ஒரு பக்கத்தில் அடங்கிவிடக்கூடியதா..?     

   பதின் பருவக் காலத்தில் , வீட்டு ரேடியோவில் பெரும்பாலும் அப்பாவும் அம்மாவும் விரும்பிக் கேட்பது பழைய பாடல்களாகத் தான் இருக்கும் . அப்போதைக்கு "பழைய பாடல்களை எழுதியவர் " என்று எனக்கு தெரிந்த ஒரே கவிஞர் கண்ணதாசன் . எனவே கேட்கும் பாடல்கள் அனைத்தும் கண்ணதாசன் எழுதியது தான் , இசையமைத்தது எம்.எஸ்.வீ தான் என்று நினைத்துகொள்வேன் . விழுப்புரத்தில் ஒரு பட்டிமன்றம் . லியோனி தலைமையில் . நான் லியோனியின் பட்டிமன்றம் பார்ப்பது அது தான் முதல் முறை . "எப்படி எப்படி சமஞ்சது எப்படி ..." என்ற பாடலை மேற்கோள் காட்டி எழுதிய கவிஞரை பெயர் சொல்லாமல் வெளுத்து வாங்கினார் லியோனி . ஆனால் எனக்கு அதன் பிறகு தான், யார் அந்த பாடலை எழுதி  இருப்பார் என்று ஆவல் பொருக்க முடியாமல் , பக்கத்தில் உக்காந்திருந்த முகம் தெரியாத ஒருவரிடம் கேட்டேன் . "வாலி" என்று பதில் வந்தது . வாலி என்ற கவிஞர் பெயர் எனக்கு இப்படியாகத் தான் முதல் அறிமுகம் . 

28 May 2016

ரகசியமானது காதல்...!

       அவளும் அவனும் சந்தித்துக் கொள்ளப் போகும் முதல் சந்திப்பு. முகநூலில் அறிமுகமாகி முதன்முதலாக நேருக்கு நேர் முகத்தைப் பார்த்துக் கொள்ளப் போகிறார்கள். முகநூலில் அறிமுகமான பின்னரே அவளுக்குத் தெரிந்தது அவன் ரைட்டர் என்று. அவனுக்கு எழுதப் பிடிக்கும், அவளுக்கு எழுத்துக்கள் பிடிக்கும். அவனைக் காதலிக்கும் முன்பே அவனது எழுத்துக்களைக் காதலிக்கத் தொடங்கிவிட்டாள். அவன் எழுதிய காதல் கதையில் வரும் கதாநாயகியாக தன்னையே பாவித்துக் கொண்டாள். கதா(தை) நாயகனாக அவனையே நினைத்துக் கொண்டாள். அக்கதையின் பயணத்துடனே அவளின் காதலும் பயணித்துக் கொண்டு இருந்தது அவளுடன், அவள் அறியாமலே. நண்பனாக இருந்தவனை எப்போது எந்த நிமிடத்திலிருந்து காதலனாக நினைக்கத் தொடங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அது எப்படி நிகழ்ந்தது என்றும் புரியவில்லை.

23 May 2016

சில வரைமுறைகள்...!

*நகத்தை பற்களால் கடிக்க கூடாது.
*மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது.
*தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது.
*துணி இல்லாமல் குளிக்கக் கூடாது.
*நெருப்பை வாயினால் ஊதக்கூடாது.
*செவ்வாய், வெள்ளிக் கிழமைகள்,

14 February 2016

பாரி வள்ளல்...

முல்லைக்கு தேர்கொடுத்தான் பாரி என்பது , நிஜமான முல்லை மலர் கொடியா இருக்காது என நினைக்கிறேன், முல்லை என்ற பெயர்கொண்ட பெண்ணாகக் கூட இருக்கலாம், பொண்ணு அழகா இருக்குனு தேர் கொடுத்து "கரெக்ட்" செய்திருக்கலாம்...!

01 January 2016

சகாப்தங்கள் முடிவதில்லை...!

   தோனிக்கு வாய்ப்புகளை அள்ளித்தந்த சூழலோ, தங்கத்தட்டில் கிரிக்கெட் நுழைவோ அவருக்குச் சத்தியமாகத் தரப்படவில்லை. பீகார் அணியில் அவர் ஆடி ஆடி அணி தோற்றுப் போன போட்டிகளின் கதைகள் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். இரவுகளில் கண்கள் சிவக்க டிக்கெட்களைப் பரிசோதித்துவிட்டு பயிற்சிக்கு போன பொழுதுகளை அவரின் ஆறு சதங்கள் சொல்லிவிடாது.
இலங்கையுடனான தொடரில் தான் இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். பந்தையே சந்திக்காமல் டக் அவுட்டாகி ஒரு நாள் போட்டி அவரை அன்போடு வரவேற்றது.